ரெய்கி கலையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்கள் (Dr. Mikao Usui). இவர் ஜப்பானில், தனியாய் என்ற ஊரில் 1865ஆ...
ரெய்கி கலையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மிக்காவோ உசுயி அவர்கள் (Dr. Mikao Usui). இவர் ஜப்பானில், தனியாய் என்ற ஊரில் 1865ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15இல் பிறந்தார். 1920களில் “யமா” என்று அழைக்கப்படும் ஒரு வகையான ஆன்மிகப் பயிற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். அந்த பயிற்சிக்காக ஜப்பானில் உள்ள குரமா என்ற மலையின் மீது 21 நாட்கள் விரதத்திலும், தியானத்திலும் இருந்தார். குரமா என்பது ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் கூடிய கடுமையான ஆன்மீக பயிற்சியாகும். மலையில் இருந்த அந்த 21 நாட்களில் “கீ” என்ற பிரபஞ்ச ஆற்றல் எங்கும் இயங்குவதை அவர் உணரத் தொடங்கினார். பிரபஞ்ச ஆற்றலை கொண்டு மனிதர்களின் நோய்களையும், பிரச்சனைகளையும் சரி செய்யலாம் என்பதை அந்த தியானத்தின் போது அவர் உணர்ந்துக் கொண்டார்.
பயிற்சி முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்தவர், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு நோய்களை குணபடுத்தவும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், இந்த ஆற்றலை பயன்படுத்தி உதவிகள் செய்யத் தொடங்கினார். வெறும் 21 நாட்கள் ஒருவர் பயிற்சி செய்தால் இந்த நிலையை அடைந்து விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இளம் பருவம் முதலாக அவரிடமிருந்த ஒழுக்கமும், மனக் கட்டுப்பாடும், முறையான உணவு முறையும், அவர் மேற்கொண்ட பயிற்சிகளும் தான் அவர் இந்த ஞானத்தை அடைவதற்கு காரணங்களாக அமைந்திருக்கும்.
அவரின் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரெய்கி பயிற்சியை அளித்திருந்தார். அவர்களில் 16 நபர்கள் மாஸ்டர் அல்லது “Shinpiden” என்ற நிலையை அடைந்தார்கள். டாக்டர் மிக்காவோ உசுயி அவர்கள் 9 மார்ச் 1926ல் காலமானார்.
பயிற்சி முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்தவர், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு நோய்களை குணபடுத்தவும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், இந்த ஆற்றலை பயன்படுத்தி உதவிகள் செய்யத் தொடங்கினார். வெறும் 21 நாட்கள் ஒருவர் பயிற்சி செய்தால் இந்த நிலையை அடைந்து விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இளம் பருவம் முதலாக அவரிடமிருந்த ஒழுக்கமும், மனக் கட்டுப்பாடும், முறையான உணவு முறையும், அவர் மேற்கொண்ட பயிற்சிகளும் தான் அவர் இந்த ஞானத்தை அடைவதற்கு காரணங்களாக அமைந்திருக்கும்.
அவரின் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரெய்கி பயிற்சியை அளித்திருந்தார். அவர்களில் 16 நபர்கள் மாஸ்டர் அல்லது “Shinpiden” என்ற நிலையை அடைந்தார்கள். டாக்டர் மிக்காவோ உசுயி அவர்கள் 9 மார்ச் 1926ல் காலமானார்.
No comments